அரசுக்குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களுக்கு மின்சார வசதி கோரி கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


வீடு கட்டித்தரவும், அரசுக்குடியிருப்பில் வசித்து வரும் பணியாளர்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டியும் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணி செய்யும் ஊழியர்களுக்கு வெறைட்டி ஹால் பகுதியிலுள்ள சிஎம்சி காலனியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு நானூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வசதியின்றி வசித்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் சாலை ஓரங்களிலும் வசித்து வருகின்றனர்.

சிஎம்சி காலனியில் வசிக்கும் தூய்மைப்பணி ஆய்வாளருக்கு மட்டும் மின்சார வசதி, குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தூய்மை பணியாளர்கள் பல முறை இதுகுறித்து மனுக்கள் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும் சிஎம்சி காலனியில் வசிக்கும் தூய்மை பணியாளர்களை மாநகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளலூரில் புதிதாக அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம்பெயர மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடம் பெயர்ந்தால், தூய்மை பணியாளர்கள் காலை 5.30 மணிக்கு பணிக்கு வருவதற்கு பேருந்து வசதிகள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. மேலும், நீண்ட தொலைவில் இருந்து பேருந்தில் வருவதற்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை. இதனால் சம்பளத்தின் பெரும் பகுதியை பேருந்து கட்டணத்திற்கே செலவிட வேண்டியிருக்கும் என குற்றம் சாட்டுகின்றனர்.



தற்போது சிஎம்சி காலனியில் புதிதாக வீடுகளை அமைத்து தர இடம் இருந்தும் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துத் தராததைக் கண்டித்து சமூக நீதிக்கட்சியுடன் இணைந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியை முற்றூகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளரிடமும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...