இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்கு தேவை என மகளிர் சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமொழி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் ஷரீஅத் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரும்புக்கடையில் நடைபெற்றது. இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்வுக்கு எந்த வகையிலும் முரணானது இல்லை என்பதை பறைசாற்றும் வகையில் பெண்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் ஃபாத்திமா முசஃப்பர் கலந்துகொண்டு இஸ்லாம் கூறும் ஷரீஅத் சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்.

இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தலாக், சொத்துரிமை, திருமணம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ள மார்க்கம் என்பதைத் தெளிவு பட பேசினார். 



காங்கேயம் ஸ்னேஹா சொசைட்டி சர்வீஸ் அற்புத பவுல் ராணி, வழக்கறிஞர் மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தாய்மை, மேன்மை, பொறுமை, மென்மை என பல தன்மைகளைக் கொண்ட பெண்மையின் உரிமைகளையும் கடமைகளையும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் விரிவுரையாளர் ஜெசீமா சித்தீக்கியா விளக்கினார். இறைச் சட்டமே அனைத்திற்கும் தீர்வு என்ற தலைப்பில் இஸ்லாமியா பள்ளி ஆசிரியை அஸ்மாபீ தய்யிபா உரையாற்றினார். இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் தேவை குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

முன்னதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் ஃபர்சானா தலைமுறை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் இஸ்லாமிய சட்டங்களே அனைத்திற்கும் தீர்வு, அதனை பெண்களாகிய நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என அனைத்து பெண்களும் ஒரு சேர உறுதிமொழி மேற்கொண்டனர். சலீனா அனைவரையும் வரவேற்க நிகழ்ச்சி நெறியாளர் ஷக்கீலா நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...