பாஜக-விற்கு பலம் ரஜினிகாந்த் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையோடு ரஜினிகாந்த் கொள்கை ஒத்துப்போவதால் பாஜக-விற்கு அவர் வந்தால் வரவேற்போம், பலமே ரஜினிகாந்த்தான் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கோவையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய பாஜக-வின் மூன்றாண்டு சாதனைகள் குறித்த பொதுக்கூட்டம் வருகின்ற மே 25 முதல் ஜூன் 15-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

மதுபானக்கடைகளுக்கு எதிராக போராடும் பெண்களை அடிக்கும் காவல்துறையைக் கண்டிக்கும் விதமாக சென்னையில் ஜூன் 16-ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு மணல் குவாரிகளை நடத்த தொடங்கிய பின்புதான் அதிக ஊழல் குவாரிகளில் நடைபெறுகிறது. மதுபானக் கடைகளில் கள்ளத்தனமாக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரூபாய் 10 முதல் 30 வரை கூடுதல் விலை வைத்து சரக்கு விற்கப்படுகிறது. இந்த பணம் ஆளும் கட்சியினருக்கு செல்கிறது. 

ரஜினிகாந்த் கடந்த இருபது வருடங்களாக அரசியல் குறித்து பேசி வருகிறார். எங்களைப்போல் அவருக்கும் ஆண்டவன் மீது நம்பிக்கை இருக்கிறது. பாஜக-வின் கருத்தோடு ஒத்துப்போகக் கூடியவர் என்பதால் அவர் பாஜக-விற்கு வந்தால் வரவேற்போம். ஆனால் ரஜினியால் தான் பாஜக-விற்கு பலம் என்று ஒத்துக்கொள்ள முடியாது. 

கருப்பு பண பெருக்கத்திற்கு காரணமாக இருந்த சிதம்பரம் கருப்பு பண ஒழிப்பு குறித்து பேசுவது சரியானதல்ல. மத்திய அரசு கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. கார்த்திக் சிதம்பரத்தின் மீது பண பரிமாற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது லண்டன் பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சி நிலைக்குமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, இது முதலமைச்சரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி என தமிழிசை பதிலலித்தார்.

மேலும், நீட் தேர்வு குறித்து தவறான தகவலை திமுக மாநிலங்களவை எம்.பி கணிமொழி பரப்பி வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தால் தான் மருத்துவ உயர்கல்விக்கு 50 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகித இடங்கள் கிடைத்திருக்கிறது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது" என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...