நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் - முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்.எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு சென்று பார்ப்பது இன்னமும் தொடர்கின்றது என குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓ.பி்.எஸ் டிவிட்டர் தகவல் தவறாக பதிவிடப்பட்டது எனவும் தற்போது அந்த பதிவு சரி செய்யப்பட்டதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் தங்கள் அணி உறுதியாக இருப்பதாகவும், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கும் எனவும் இரு அணிகள் தரப்பிலும் ஆரோக்கியமான வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது எனவும் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், வலிமையான நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் என தெரிவித்தார். ரஜினி அரசியல் வருகை என்பது வரவேற்க வேண்டியது என கூறியவர் ரஜினி நல்ல மனிதர் எனவும் தெரிவித்தார். அதிமுகவை பா.ஜ.க நேரடியாகவே இயக்கும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும், எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என்றார். 11ம் வகுப்புக்கு பொதுதேர்வு என்பது வரவேற்கதக்க நடவடிக்கை என பாராட்டியவர் அமைச்சர் செங்கோட்டையன் செய்படுத்திய கிரேடு முறை திட்டம் அருமையான திட்டம் எனவும் கடந்த 3 மாதங்களாக பள்ளிகல்வி துறை சிறப்பாக செயல்படுகின்றது எனவும் பாராட்டினார். தவறை சுட்டிகாட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிகாட்டியும் விமரசிக்க வேண்டிய நேரத்தில் விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்றவர் பள்ளிகளில் அம்மா கிட்ஸ் உபகரணங்களை உடனடியாக வழங்கப்பட்டால் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இணையாக மாநில பாடதிட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...