தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஒரு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர உரிமையுண்டு என தெரிவித்தார். அரசியலில் பெரியார் பாதையை பின்பற்றுவேன் என கூறிய ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தை தவறான பாதையில் நடத்திய சென்றவர் ஈவெரா என பதிலளித்தார். தமிழகத்தில் பெரியார் பாதை என்பது இந்து விரோத பாதை என கூறிய அவர், அந்த பாதையை ஆன்மிகவாதியான ரஜினிகாந்த் ஏற்று கொள்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும் கூறிய அவர், பாஜக தமிழக அரசியல் சூழலை பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டுபவர்கள் அரசியல் அரிசுவடி தெரியாதவர்கள் என தெரிவித்தார். பாஜகவினர் ஒன்றும் சந்நாசிகள் அல்ல எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். ஜானகி, ஜெயலலிதா சண்டையை பயன்படுத்து திமுக ஆட்சிக்கு வந்தது தவறில்லை என்றால், இதுவும் தவறு இல்லை என அவர் தெரிவித்தார். இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இந்தி படிக்கக்கூடாது என தமிழக மக்களை கிணற்று தவளைகளாக்க திமுக முயற்சிக்கிறது எனவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். ஊழல் வழக்கில் சிறை சென்ற கனிமொழிக்கு பாஜக பற்றி பேச அருகதை கிடையாது எனவும், பாஜக நிறுத்தும் வேட்பாளர் தான் குடியரசு தலைவராக முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

திகார் சிறையில் உள்ள அதிமுக துணைபொதுச்செயலாளர் தினகரனுக்கு கம்பெனி கொடுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் விரைவில் சிறைக்கு செல்வார் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...