கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 92-வது வார்டுக்குட்பட்ட நரசிம்மபுரம் பகுதியில் புதிதாக அமையவுள்ள மாநகராட்சி பூங்காவை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று நீர்த் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், பொதுமக்கள் தேக்கிவைத்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நரசிம்மபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத் தொட்டியினையும், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.