புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைக் கல் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 40 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Coimbatore: விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோவை முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், மயில் தோகை போன்ற சிறப்பு மாலையுடன் பக்தர்களை வரவேற்றார்.



புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலை ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல்லால் ஆன சிலையாகும். 190 டன் எடை கொண்ட இந்த சிலையின் உயரம் 19 அடியும், அகலம் 10 அடியும் கொண்டது. இந்த சிறப்பு மிக்க விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தன காப்பில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை மற்றும் பல்வேறு இனிப்புகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் தொடர்ச்சியாக கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.



பக்தர்கள் எந்த சிரமங்களும் இன்றி தரிசனம் செய்வதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்புகள் அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, பக்தர்கள் வரிசையாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் மட்டுமின்றி, கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில் உட்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு வருகை தந்து விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...