கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம், அருங்காட்சியகம், மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து, பழுதுகள் சரிசெய்ய உத்தரவிட்டார்.
Coimbatore: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (03.09.2026) நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

வார்டு எண் 67-க்கு உட்பட்ட செம்மொழிப் பூங்கா வளாகத்தில், உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ரோஜாத் தோட்டம், மகளிர் அங்காடி, கற்சிலைகள், பழங்கால தமிழர்களின் பயன்படுத்திய பொருட்களின் அரசு தொல்லியல் அருங்காட்சியகம், படிப்பகங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மேயர் நேரில் பார்வையிட்டார்.

செம்மொழிப் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேடு, பொதுமக்களுக்கான நுழைவு வாயில் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு செய்த மேயர், அங்கு ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை உடனடியாக சரிசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், கட்டணம் வசூலிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், திறந்த வெளி உடற்பயிற்சி இடம், செயற்கை நீர்வீழ்ச்சி பகுதி, கட்டண உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு CCTV கேமரா மூலம் கண்காணிக்கும் அறையின் செயல்பாடுகள் ஆகியவற்றை மேயர் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கம் (Convention Hall) கட்டுமானப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் (பொது) மற்றும் செம்மொழிப் பூங்கா பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வார்டு எண் 67-க்கு உட்பட்ட செம்மொழிப் பூங்கா வளாகத்தில், உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ரோஜாத் தோட்டம், மகளிர் அங்காடி, கற்சிலைகள், பழங்கால தமிழர்களின் பயன்படுத்திய பொருட்களின் அரசு தொல்லியல் அருங்காட்சியகம், படிப்பகங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மேயர் நேரில் பார்வையிட்டார்.
செம்மொழிப் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேடு, பொதுமக்களுக்கான நுழைவு வாயில் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு செய்த மேயர், அங்கு ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை உடனடியாக சரிசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், கட்டணம் வசூலிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், திறந்த வெளி உடற்பயிற்சி இடம், செயற்கை நீர்வீழ்ச்சி பகுதி, கட்டண உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு CCTV கேமரா மூலம் கண்காணிக்கும் அறையின் செயல்பாடுகள் ஆகியவற்றை மேயர் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கம் (Convention Hall) கட்டுமானப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் (பொது) மற்றும் செம்மொழிப் பூங்கா பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.