வருவாய் தீர்வாயத்தில் பயனாளிகளின் மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது- கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி இன்று (17.05.2017) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பின்னர் தெரிவித்ததாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் நடைபெறும். இத்தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டத்திலுள்ள கிராம கணக்குகள் அனைத்தும் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் சரிபார்க்கப்படும்.



மேலும், வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது குறைகளை வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு அளித்து பயன்பெறுவர். மேற்படி மனுக்களை பரிசீலனை செய்து உரிய ஆவணங்களுடன் அளிக்கப்படும் தகுதியான விண்ணப்பங்கள் அன்றைய தினமே, தீர்வு காணப்படும். மற்றைய மனுக்கள் தொடர் நடவடிக்கைகளின் பொருட்டு பரிசீலனை செய்யப்பட்டு தீர்வுசெய்யப்படும்.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த் தீர்வாயம் பொள்ளாச்சி வட்டத்தில் 17.05.2017 முதல் 30.05.2017 வரையும், மேட்டுப்பாளையத்தில் 17.05.2017 முதல் 23.05.2017 வரையும், பேரூர் வட்டத்தில் 17.05.2017 முதல் 25.05.2017 வரையும், கோவை வடக்கு வட்டத்தில் 17.05.2017 முதல் 24.05.2017 வரையும், கோவை தெற்கு வட்டத்தில் 17.05.2017 மற்றும் 18.05.2017 ஆகிய நாட்களிலும், கிணத்துக்கடவு வட்டத்தில்; 17.05.2017 முதல் 19.05.2017 வரையும், அன்னூர் வட்டத்தில்; 17.05.2017 முதல் 19.05.2017 வரையும், மதுக்கரை வட்டத்தில் 17.05.2017 முதல் 23.05.2017 வரையும், சூலூர் வட்டத்தில்; 17.05.2017 முதல் 23.05.2017 வரையும் என வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடத்த தீர்மாணிக்கபட்டு நடைபெற்றுவருகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் வட்டத்திற்கும், வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரூர் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், அன்னூர் வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி வட்டத்திற்கு சார்ஆட்சியர், கோவை (தெற்கு) வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு), கோவை வடக்கு வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர், மேட்டுப்பாளையத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு), சூலூர் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அவர்களும், மதுக்கரை வட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்களும், கிணத்துக்கடவு வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களும், வால்பாறை வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் அவர்களும், வருவாய் தீர்வாய அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில் மாவட்டத்தின் அனைத்து உள்வட்டங்களில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தத்தம் பகுதியைச் சார்ந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அயன் பட்டா மாறுதல், நிலச் சீர்திருத்த நிலங்கள் தொடர்பான பட்டா மாறுதல்கள், வாரிசுச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று உள்ளிட்ட இதர சான்றுகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகைகள், தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோவை வடக்கு வட்டத்தில் வரப்பெற்ற 102 மனுக்கள் உள்ளிட்டு மொத்தம் 1021- மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 1000 மனுக்கள் மேல் நடவடிக்ககைக்காக பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு சில மனுக்கள் பல்வேறு காரணங்களுக்கான தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன" என மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...