கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் Dr. சுமதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026 – தி கோல்டன் அவர் அண்ட் பியான்ட் ரேஸ் எகைன்ஸ்ட் டைம் இன் நியூரோ எமர்ஜென்சிஸ்" (பொன்னான நேரமும் அதற்கு அப்பாலும்: நரம்பியல் சார்ந்த அவசரநிலையில் சிகிச்சைக்கான துரித ஓட்டம்) என்ற தலைப்பிலான தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

Dr. சுமதி, இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை, கோயம்புத்தூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோயாளிகளின் கருத்துகளை கவனமாகக் கேட்பது, அவர்களிடம் பரிவு மற்றும் அன்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர், ரமா ராஜசேகரன் வரவேற்புரை வழங்கி, மாநாடு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நியூரோ ஃபிராண்டியர்ஸ் - 2026 என்ற இந்த தேசிய மாநாடு அறிவு வளர்ச்சி, தொழில் முறை வலையமைப்பு, ஆராய்ச்சி பரிமாற்றம் மற்றும் நரம்பியல் அவசர நெறிகளுக்கான பல்துறை அணுகுமுறைகளை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது. மேலும் நரம்பியல் அவசர நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் உயிரை காப்பாற்றும் என்ற முக்கிய செய்தியை வலியுறுத்தும் கல்வி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த மாநாடு நரம்பியல் சார்ந்த செவிலியர் கல்வி மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறைகளில் புதிய சிந்தனைகளும் தரமான ஆராய்ச்சி நடைமுறைகளையும் உருவாக்கும், ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இந்த தேசிய மாநாடு நரம்பியல் அவசர நிலைகளின் துரிதமான கண்டறிதல் மற்றும் மேலாண்மை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...