கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 16-வது வார்டுக்குட்பட்ட மருதமலை ரோடு, வடவள்ளி பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வடவள்ளி பகுதிகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பின் லிங்கனூர் மயானத்தில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், வடவள்ளி பகுதிகளில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியம் மற்றும் மூடு பலகை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்பு முனையம் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வடவள்ளி பகுதிகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பின் லிங்கனூர் மயானத்தில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், வடவள்ளி பகுதிகளில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியம் மற்றும் மூடு பலகை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்பு முனையம் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.