கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பீளமேடு, வைரவர் நகர், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27க்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (21.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



வடக்கு மண்டலம் வார்டு எண் 27க்குட்பட்ட பீளமேடு, ரங்கம்மாள் கோவில் வீதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும், வைரவர் நகர் பகுதியில் சாலை செப்பனிடும் பணிகள் குறித்தும், ஆவாரம்பாளையம் சாலை, துரைசாமி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்தும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின்போது, மேயர் அலுவலர்களுக்கு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தாமதமின்றி நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.



முன்னதாக, மேயர் வார்டு எண் 26க்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள சிறுபாலத்தை அகலப்படுத்துவது மற்றும் அங்குள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலம் அகலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், உதவி ஆணையர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் தேவதாஸ், செயற்பொறியாளர் உதவி சத்தியமூர்த்தி(பொ), மண்டல. சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர் குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன், மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து மழைநீர் வடிகால்களும் சரியாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நகரின் வடிகால் அமைப்பை சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தேங்கும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...