துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 17, 2026 அன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துப்புரவு பணியாளர்கள் மற்றும் அனிமேட்டர்கள் உள்ளிட்ட 25 பேர் பங்கேற்றனர்.


Coimbatore: Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு பேரணி ஆகஸ்ட் 17, 2026 அன்று நடைபெற்றது.

மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 1, 2, 12, 13, 14 மற்றும் 15-க்குட்பட்ட துடியலூர் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டது.




துடியலூர் வார்டு அலுவலகம் முதல் துடியலூர் ஆஞ்சநேயர் கோவில் வரை சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு இப்பேரணி நடைபெற்றது. வார்டு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனிமேட்டர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.




Coimbatore மாநகராட்சி 5 மண்டலங்களில் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் மாற்று பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் பூமியின் நலம், விலங்குகளின் நலம் மற்றும் நீரின் வளம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.




துப்புரவு ஆய்வாளர் க.ஜீவமுருகராஜ் அவர்கள் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியில் சுமார் 25 நபர்களுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....