கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தேசியக் கொடியேற்றி, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திரதின பேருரை வழங்கினார்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா 15.08.2026 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.






துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திர தின விழாப் பேருரை வழங்கினார். அவர் தனது உரையில், "இந்திய இளைஞர்களின் உழைப்பும், பொறுப்புணர்வும் உலக அரங்கில் உயர்ந்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இதற்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் என்றும் மறவாமல் போற்றப்பட வேண்டும். அதன் வெளிப்பாடாக, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் உறுதி கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.




கற்பகம் கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயலர் க. முருகையா, பதிவாளர் முனைவர் பீ. வீ. பிரதீப், தேர்வாணையர் முனைவர் ப. பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், NCC, NSS மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது சிறந்த பங்களிப்புக்காகப் பாராட்டுப் பெற்றனர். முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் விழாவில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...