“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை: தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்களையும் அவதூறாகவும், கொச்சையாகவும் பேசி வருவதாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேரறிவாளன், த.வெ.க நிர்வாகி மைக்கேல் தொடர்ந்து தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் குடும்பப் பெண்களையும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

திரைப்பட நடிகைகள் குறித்து தவறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், பிற பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாகக் கூறப்படும் த.வெ.க நிர்வாகி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ‘சிங்கப் பெண்கள்’ படையை தொடங்கியதாக கூறும் த.வெ.க, தங்களது கட்சி நிர்வாகி பெண்கள் குறித்து அவதூறாகப் கூறப்படும் புகார் குறித்து கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கோவையை சேர்ந்த மைக்கேல் திட்டமிட்டு மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுகிறாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் மைக்கேல் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...