கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவம் தொடர்பாக கேரளா மற்றும் வாளையார் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: தமிழக–கேரளா எல்லையான வாளையார் அருகே மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும் அதன் குட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் நேற்றிரவுசுமார் 11.40 மணியளவில் காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் யானை மற்றும் குட்டி யானை மீது மோதியது.

ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இரு யானைகளும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.



சம்பவம் கேரள மாநில எல்லைக்குள் நிகழ்ந்திருந்தாலும், தமிழக எல்லையில் இருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் நடைபெற்றதால், வாளையார் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து, யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து வாளையார் வனத்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ரயில்வே பாதைகளில் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....