கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயமடைந்த மேலாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட ஜியாவுல்ஹக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவையை அடுத்த குனியமுத்தூர் பி.கே. புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையில் சம்பளம் மற்றும் வருகைப் பதிவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மேலாளரின் கழுத்தை கத்தியால் அறுத்ததாகக் கூறப்படும் தொழிலாளியை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பி.கே. புதூர் பகுதியில் இயங்கி வரும் டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளிக்கடையில் கடந்த மூன்று மாதங்களாக மேலாளராக பணியாற்றி வருபவர் முகமது கபீர் (55). இவர் குனியமுத்தூர் அர்ச்சனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இதே கடையில் திருப்பூரைச் சேர்ந்த ஜியாவுல்ஹக் (55) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜியாவுல்ஹக்குக்கும், மேலாளர் முகமது கபீருக்கும் இடையே வருகைப் பதிவு மற்றும் சம்பளம் வழங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று கடைக்கு வந்த ஜியாவுல்ஹக், முகமது கபீரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜியாவுல்ஹக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது கபீரின் கழுத்தில் சரமாரியாக தாக்கியதாகவும், பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.



இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த முகமது கபீர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனிருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது கபீரின் மனைவி ஜீனத் (47) அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜியாவுல்ஹக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...