கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி முடித்த 1434 மாணவர்களுக்கு பட்டங்களும், 14 தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பெங்களூரு பல்கலைக்கழக இணை துணை வேந்தர் நாகார்ஜுனா சதினேனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி முடித்த மாணவர்களுக்கான இந்த விழாவில் 1434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.




கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் விழாவிற்கு தலைமை தாங்கினார். Dr. நாகார்ஜுனா சதினேனி, இணை துணை வேந்தர் (Pro Vice Chancellor), PES பல்கலைக்கழகம், பெங்களூரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். Dr. தனசேகரன் ராதாகிருஷ்ணன், Global Senior Vice President, Product Engineering CU–ERS, HCLTech, பெங்களூரு கௌரவ விருந்தினராக விழாவில் பங்கேற்றார்.




தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கல்லூரி முதல்வர் Dr. P. கார்த்திகைக்குமார் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து Dr. நாகார்ஜுனா சதினேனி தலைமையுரை வழங்கினார். பின்னர் Dr. தனசேகரன் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.




தனது சிறப்புரையில், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், கல்வியின் ஆற்றல் இளைஞர்களை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்பவர்களாக மாற்றுகிறது என்று கூறினார். AI தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், இயற்கை தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். வாழ்வில் உழைப்பு மற்றும் நேர்மை மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.




விழாவில் 1434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற 14 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் R. வசந்தகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி K. முருகையா, கல்லூரி முதல்வர் Dr. P. கார்த்திகைக்குமார், திருமதி. சோபியா Dean உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




கல்லூரியின் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...