கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமூக நீதி மற்றும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வலியுறுத்தியும், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நடைப்பயணம் இன்று முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

கோவை: 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் வியாழக்கிழமை கோவையில் தொடங்கியது.

கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலப் பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆறுமுகம் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதி மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் மக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய அவர், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கும், மத்திய அரசு அவற்றுக்கு தீர்வு காண வலியுறுத்துவதற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.



அதன்படி, கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கியுள்ள இந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நடைப்பயணத்தின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நலன் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்ட உள்ளதாக எம். ஆறுமுகம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...