ஆசிய அளவில் யோகாவில் இரு தங்கப் பதக்கம் வென்ற பார்க் பள்ளி மாணவி வைஷ்ணவி

பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி தாய்லாந்தில் ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் இரு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்ததற்கு கோவையில் உள்ள கேரளா கிளப்-யில் பாராட்டு விழா நடைபெற்றது.

தாய்லாந்தில் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.



இதில், இந்தியாவில் இருந்து 15 மாணவர்கள் ஜூனியர் நிலையில் கலந்து கொண்டு தங்களது யோகா திறமையினை வெளிப்படுத்தினர். இதில், பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்றதோடு, ஒட்டுமொத்த முதல் பரிசாக சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

மாணவி வைஷ்ணவி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், தேசிய, மாவட்ட அளவில் 200-க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேச அளவில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.



இவருக்கு "யோகா ராணி", "யோகா நட்சத்திரா" போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர "இளம் சாதனையாளர் விருது", "யோகா கலைமாமணி" விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இவரது யோகா செயல்திறன் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் 26ம் தேதியன்று நடைபெற்ற 3-வது காண்வெல்த் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இவர், 30 நிமிடங்களில் 596 ஆசனங்களையும், ஒரு நிமிடத்தில் 47 ஆசனங்களையும் செய்து இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு நிமிடத்தில் 64 ஆசனங்களை செய்து ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

மாணவி வைஷ்ணவி, இதுகுறித்து பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், இவரது இலக்கு கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதாக கூறினார். மேலும், இவரது வெற்றிக்கு பள்ளியில் அளிக்கப்பட்ட தனித்துவமான முக்கியத்துவமே காரணம் என்றும், பார்க் குளோபல் பள்ளி என்றுமே மறைந்திருக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர தவறியதில்லை எனவும் கூறினார்.



மேலும், தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, இவருக்கு இலவச கல்வி, ஜிம்னாஷ்டிக் பயிற்சிக்கு உதவி அளிப்பதாகவும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவிவருவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, பார்க் குளோபல் பள்ளியின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி வைஷ்ணவியை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அனைவரும் யோகா பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ அறிவுறுத்தினார்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...