வெள்ளலூர் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மனு


வெள்ளலூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில்  கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், 

உக்கடம் பெரிய குளத்திற்கு தண்ணீர் திருப்பும் சட்டர், பாலம் கட்டுவதற்காக உடைக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் இனியும் சட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபடலாம் அல்லது அதிக நீர் வாய்க்கால் குளத்தை உடைக்க நேரிடும்.

மேலும், வெள்ளலூர் வாய்க்கால் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிடம் பேசி பத்து நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், உக்கடம் வாய்க்கால் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்  என தெரிவித்தனர்.

முன்னதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...