வெள்ளலூர் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மனு


வெள்ளலூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில்  கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், 

உக்கடம் பெரிய குளத்திற்கு தண்ணீர் திருப்பும் சட்டர், பாலம் கட்டுவதற்காக உடைக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் இனியும் சட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபடலாம் அல்லது அதிக நீர் வாய்க்கால் குளத்தை உடைக்க நேரிடும்.

மேலும், வெள்ளலூர் வாய்க்கால் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிடம் பேசி பத்து நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், உக்கடம் வாய்க்கால் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்  என தெரிவித்தனர்.

முன்னதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...