தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி இன்று (ஆகஸ்ட் 3), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் அரசு விழாவாக ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில், கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தனின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.



நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ சரத், 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எ. கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் கே. சுபாஷ், மாநகரப் பொருளாளர் வடவள்ளி ரவி, மாநகர துணைத் தலைவர் சிக்கன் சின்னத்தம்பி, மாநகரச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்சியின் மாநகர துணைச் செயலாளர் கவுண்டம்பாளையம் சீனிவாசன் செய்திருந்தார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஈரோடு மாவட்டம், ஓடநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...