கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை eKYC பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார். தற்போது 95.82% பதிவு நிறைவடைந்துள்ளது.


Coimbatore: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வழங்கப்படும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்க மத்திய அரசு விரல் ரேகை அடிப்படையிலான eKYC பதிவினை கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2023 முதல் இப்பணி நடைபெற்று வருகிறது.




தற்போதைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.82 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 88.65 சதவீதமும் கைவிரல் ரேகை பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பயனாளிகளின் பதிவினை நிறைவு செய்யும் நோக்கில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




100% eKYC பதிவினை நிறைவு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 2, 2026 அன்று கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை அல்லது அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.




மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளும் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் 100% eKYC பணியினை நிறைவு செய்ய உறுதுணை செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar வேண்டுகோள் விடுத்துள்ளார். கைவிரல் ரேகை பதிவு செய்யாத பயனாளிகள் தவறாமல் ஆகஸ்ட் 2-ல் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...