கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையாராக துரை பதவியேற்பு


தமிழகம் முழுவதும் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை  இடமாற்றம் செய்து கடந்த 13-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கோவை மாநகரில் துணை ஆணையராக (போக்குவரத்து) பணியாற்றி வந்த சரவணன் சென்னை பெருநகர தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

கோவை மாநகரின் புதிய துணை ஆணையராக (போக்குவரத்து) துரை நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த துரை-க்கு காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கோப்புகளில் கையொப்பமிட்ட அவர், கோவை மாநகரின் போக்குவரத்து துணை ஆணையராக பதவியேற்றுக்கொண்டார். 



இதை தொடர்ந்து, அவர் சிம்ப்ளி-சிட்டி க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோயம்புத்தூர் மாவட்டத்தை நன்கு அறிந்தவன் நான். எனது கல்லூரி படிப்பை இங்கு தான் முடித்தேன். போக்குவரத்து சம்பந்தமாக கோவை மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணரமுடிகிறது.  பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்துவது மட்டுமின்றி, கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக மாற்ற திட்டங்களை செயல்படுத்துவேன். திட்டங்கள் வருங்காலத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...