கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை: கோவை நீதிமன்றம் அருகிலுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின்போது, முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கொடிநாள் நிதியாக வசூலிக்கப்பட்ட ரூ.61.90 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அமைச்சரிடம் வழங்கினார்.



தொடர்ந்து, 14 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.



நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...