கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார். விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: இந்திய அரசு 2027ஆம் ஆண்டு குடியரசுதின விழாவில் வழங்கவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு இந்திய அரசாங்கம் பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்குகிறது.

இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. மேன்மை பொருந்திய பணிகளை செய்து சாதனை படைத்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பெற்று, ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு தொடர்பான விண்ணப்பங்கள் மட்டும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெறப்படும்.

விளையாட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதன் மூன்று நகல்களுடன் ஜூலை 31, 2026க்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கோவை மாவட்டம் அவர்களிடம் நேரில் வந்து சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரைகளுடன் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...