மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக தொழிலாளியை தள்ளியதில் அவர் உயிரிழந்த வழக்கில், குணசேகரன் (29) என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக பெயிண்டிங் தொழிலாளியை தாக்கி கொலை செய்ததாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (29) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாஸ்திராபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (43) ஆகியோர் பெயிண்டிங் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இருவரும் கோவை இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிடப் பெயிண்டிங் பணிக்காக ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி மூலம் அழைத்து வரப்பட்டு, பணிபுரிந்த அதே கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி இரவு வேலை முடிந்த பின்னர் இருவரும் மது அருந்தியபோது, பணப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில், அருகில் கிடந்த பி.வி.சி. குழாயால் வெங்கடேஷ் குணசேகரனை தாக்கியதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த குணசேகரன் வெங்கடேஷை பலமாகத் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குணசேகரன் அங்கிருந்து விலகிச் சென்று கட்டிடத்தின் மேல்தள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை, அவர்களுடன் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் இருந்த வெங்கடேஷின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் BNS 103, 105 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குணசேகரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...