கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் தொடர் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




ஆனைமலையை அடுத்த ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்தால் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி 55.55 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 273 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. மொத்த கொள்ளளவு அணையில் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி நீர்மட்டம் 23.92 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 969 கன அடி நீர் வரத்து உள்ளது. 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது. இதனால் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி நீர்மட்டம் 61.25 அடியை எட்டியுள்ளது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 365 கன அடி நீர் வரத்து உள்ளது மற்றும் 1321 கன அடி வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




தென்மேற்கு பருவமழை தொடர்ந்தால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...