கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் தொடர் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




ஆனைமலையை அடுத்த ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்தால் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி 55.55 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 273 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. மொத்த கொள்ளளவு அணையில் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி நீர்மட்டம் 23.92 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 969 கன அடி நீர் வரத்து உள்ளது. 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது. இதனால் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி நீர்மட்டம் 61.25 அடியை எட்டியுள்ளது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 365 கன அடி நீர் வரத்து உள்ளது மற்றும் 1321 கன அடி வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




தென்மேற்கு பருவமழை தொடர்ந்தால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...