வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...