கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 12 துறைகள் பங்கேற்று 3963 பணியாளர்கள் பலன் பெற்றனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இந்த முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS முன்னிலை வகித்தார்.

இன்று காலை 10 மணி முதல் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் வருவாய்த்துறை, திறன் மேம்பாட்டு பயிற்சி நிருவனம், பள்ளிக் கல்வித்துறை, மருத்துவத்துறை, தாட்கோ, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



பங்கேற்ற துறை அலுவலர்கள் தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் ESI, PF தொடர்பாகவும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் 3963 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்துகொண்ட பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), வே.கதிர்வேல் (வடக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), சுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், ஆண்டியப்பன், குணசேகரன், ராஜேந்திரன், உதவி பொறியாளர் மஞ்சுளா தேவி, சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், விஜயகுமார், சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...