கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகள் காவல் ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தன.

கோவை: கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, அரசுக்குச் சொந்தமான பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி சி.பி.ஐ. (எம்.எல்.) உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. (எம்.எல்.) மாநிலக் குழு உறுப்பினர் பெரோஸ், கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறினார்.

அதன் விளைவாக, பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்திருந்ததாகவும், தற்போது மீண்டும் அரசுப் பள்ளி மைதானங்களில் 'சாகா' பயிற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.



மேலும், இதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களிடையே மத மற்றும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பள்ளி வளாகங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்கள் இதற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு உடனடியாக தலையிட்டு, அரசுப் பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பெரோஸ் தெரிவித்தார்.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....