வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

தொழில் தொடங்க விழையும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (யூ.ஓய்.இ.ஜி.பி) திட்டத்தின் கீழ் கடன் பெற மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் யூ.ஓய்.இ.ஜி.பி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம்  முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் அதிகபட்சமாக ரூ.1,25,000 வழங்கப்படும்.

தொழில் தொடங்கும் பொதுப்பிரிவினர் திட்டமதிப்பில் 10 சதவீதம் முதலீடு செய்யவேண்டும். சிறப்புபிரிவினரான பட்டியலிடப்பட்ட இனத்தவர் /  பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / மகளிர் / முன்னாள் படைவீரர்கள் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்கள் ஆகியோர் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.  மீதமுள்ள முதலீட்டுத்தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரின் குடும்ப ஆண்டு வருமானம் 1,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்திற்கு ஆதாரமாக சான்றுதி அலுவலர் (நோட்டரி பப்ளிக்) முன்னிலையில் மனுதாரர் அளித்த ஆணை உறுதி ஆவணம் சமர்ப்பித்தாலே போதுமானது. இக்கடன்கள் பெறுவதற்கு சொத்துப்பிணையம் தேவையில்லை. மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதுரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இக்கடன் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மனுதாரர்கள் நேரடியாகwww.dickovai.com என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடன் விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், தாமே தயாரித்த திட்ட அறிக்கை, கல்விச்சான்று, குடும்ப அடையாள அட்டை, இனம்,  முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றிற்கான சான்று நகல்களுடன் இரட்டை நகல்களில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2 இராஜ வீதி, கோயம்புத்தூர் - 641  001  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...