வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று பேரிடம் கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று அதிகாரிகள் இச்சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாளையார் சோதனைச்சாவடியில் தினமும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சோதனைச்சாவடியில்பணியாற்றும் அதிகாரிகள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.




இச்சோதனையின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் அவரது உதவியாளர்களான கல்பனா, பத்மா ஆகியோரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாளையார் சோதனைச்சாவடியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்திருந்த நிலையில், இந்த அதிரடி சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...