மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு

மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனு அளிக்க வந்த அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கூறுகையில்,

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், அரசு நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடையின் பூட்டை உடைத்தும், மது பாட்டில்களை உடைத்தும் போராட்டம் செய்து வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது, அங்கு பணிபுரிவோர் மீதும் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் பாதிப்படைந்த மதுபானக் கடை ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்த இடத்திலேயே அரசு மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில் மதுபானக் கடை மற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...