கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்புரை ஆற்றினார்.


Coimbatore: கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் பிரிவு மாணவர்களுக்கான 18-வது பட்டமளிப்பு விழா நேற்று (11.07.2026) நடைபெற்றது. இவ்விழாவில் மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.






கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr இராச. வசந்தகுமார், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் Dr சு. இரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழாவில் பேருரை நிகழ்த்தினார். மாணவர்களின் உயர்கல்வியும், ஆராய்ச்சியும், சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




பொதுநல சிந்தனையும், தியாக உணர்வும் உலகில் அன்பையும், அமைதியையும் நிலைக்கச் செய்ய வேண்டும். தனிமனித தேவைகள் குறைந்து, உணவு, கல்வி, மருத்துவம் முதலான அடிப்படை தேவைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதற்கு மாணவர்கள் உறுதியேற்க வேண்டும் என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.




இந்த விழாவில், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பதிவாளர் Dr பீ.வீ. பிரதீப், தேர்வாணையர் Dr ப. பழனிவேலு மற்றும் Dr வீ. இராகவி உள்ளிட்ட முதன்மையர்களும், துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...