கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்கம் வென்ற 40 வயதுக்குட்பட்ட வீரர் வீராங்கனை ஒருவரை பகுதி நேர பயிற்சியாளராக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30, 2026.


Coimbatore: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் Khelo India திட்ட நிதியுதவியில் Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் செயல்படும் துவக்கநிலை கால்பந்து பயிற்சி மையத்திற்கு பகுதிநேர பயிற்சியாளர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தற்போது இந்த மையத்தில் 50-100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு தினசரி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்குட்பட்ட கால்பந்து வீரர் வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும் என்பது அவசியமான தகுதி.

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர தொகுப்பு ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல, முற்றிலும் தற்காலிகமானது. இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

விண்ணப்பங்களை Coimbatore மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பெற்றுக்கொள்ளலாம். ஜூலை 30, 2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 4, 2026 அன்று Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் Pawan Kumar Giriyappanar தெரிவித்துள்ளார்.

இளம் விளையாட்டு வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதற்காக தேசிய அளவில் அனுபவம் பெற்ற வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கும் இத்திட்டம், மாவட்ட கால்பந்து வீரர்களின் திறன் மேம்பாட்டிற்கு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...