அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாக திமுக எம்.பி திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் திமுக சார்பில் இந்தி திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து கழக ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தமிழக அரசு பிடிவாதம் கட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மோனா ரயில் திட்டத்திற்கு ஆதரவாக மெட்ரோ திட்டத்தை கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் சென்னை முழுமைக்கும் மெட்ரோ இரயில் இயக்கப்பட்டு இருக்குமெனவும், மதுரை, கோவை, திருச்சியிலும் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசை மத்திய அரசு கைப்பாவையாக இயக்குகிறதோ, இல்லையோ தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக திருச்சி சிவா தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் மக்கள் நலனை பேணவில்லை எனவும், அமைச்சர்கள் அதிமுக இணைப்பையும், வழக்குகளையும் பற்றி மட்டுமே கவலைப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திருச்சி சிவா தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, பாராட்டும், மகிழ்ச்சி் எனவும் பதிலளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடந்து வருவதாகவும், தமிழகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு தேசிய தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழக அரசிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் நீட் தேர்வை நிறுத்தி இருக்க முடியுமெனவும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்பிரச்சணைக்கு தீர்வு காண தமிழக அரசிற்கு தெரியவில்லை எனவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...