கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்படும் வடமாநில வாலிபரை இளைஞர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டதும் மன்னிப்பு கேட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில், நேற்று அதிகாலை திருட முயன்றதாகக் கூறப்படும் வடமாநில வாலிபர் ஒருவரை விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், விடுதியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் பூட்டை உடைத்து திருட அந்த நபர் நீண்ட நேரம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாகனத்தின் பூட்டை உடைக்க முடியாமல் தவித்த நிலையில், இரவு பணி முடித்து வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் அங்கிருந்து அமைதியாக விலகிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அவர், விடுதியின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் செல்போன்களைத் திருட முயன்றபோது, எதிரே உள்ள மற்றொரு விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் அவரைக் கண்டு சந்தேகமடைந்து விரட்டிச் சென்று கையும் களவுமாகப் பிடித்தனர்.

நள்ளிரவில் முன்பின் தெரியாத நபர் விடுதிக்குள் சுற்றித் திரிந்ததைப் பார்த்த இளைஞர்கள், அவரைச் சுற்றி வளைத்து, “யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?” என்று விசாரித்தனர். தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், இளைஞர்களின் காலில் விழுந்து, “என்னை விட்டுவிடுங்கள்… தெரியாமல் செய்து விட்டேன்” என்று இந்தி மற்றும் அரைகுறை தமிழில் கைகளை கூப்பி அழுது மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது நாடகத்தை நம்பாத இளைஞர்கள், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு, அந்தப் பகுதியில் உள்ள மற்ற விடுதிகள் மற்றும் வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...