நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பாரம்பரிய இசை, கரகாட்டம் மற்றும் பழங்குடியின நடன நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பித்தன.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராம மக்களின் குலதெய்வமான அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா சனிக்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

புனரமைக்கப்பட்ட கோவிலில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

நல்லூர்பதி கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை முழக்கி, கரகாட்டம் மற்றும் பழங்குடியின பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து தங்களது பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.



பின்னர், எஸ்.பி.வேலுமணி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுடன் கலந்துரையாடினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...