கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ₹12,200 பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வருவாய்கள் மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ADSP ராஜேஷ் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் ஒன்பது போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் காரணமாக மத்திய மண்டல அலுவலக நுழைவாயில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.



சோதனையின் முடிவில், m கணக்கில் வராத ₹12,200 பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சோதனையில் மொத்தமாக ₹31,27,110 ரொக்கப் பணமும், GPay பரிவர்த்தனைகள் மூலம் ₹26,70,990-மும் கண்டறியப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...