ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இந்தத் திட்டம் நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.


சென்னை: 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதற்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம் மற்றும் தங்க, வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தரத்தில் புதிய வடிவமைப்புடன் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த ₹642 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு முதற்கட்டமாக ₹300 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட வழிவகை செய்த கைத்தறித் துறை அமைச்சர், துறை உயர் அதிகாரிகள் மற்றும் நெசவாளர்களின் நலனை முன்னிறுத்தி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, பொங்கல் இலவச வேட்டி-சேலை திட்டத்தை தரமான முறையில் செயல்படுத்தவும் உதவும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...