மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்கு, மீண்டும் முக்கிய பதவியான கட்சித் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


கோவை: அதிமுகவில் கட்சியின் முன்னாள் அமைச்சரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவருமான S.P. வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

அதிமுகவில் பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர்கள் S.P. வேலுமணி மற்றும் நத்தம் R. விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, கட்சியை மீறி தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் S.P. வேலுமணி, C.V. சண்முகம் உள்ளிட்டோர் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான S.P. வேலுமணி அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது S.P. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அதிமுகவில் புதிய அரசியல் சமநிலைக்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்த தலைவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, வரவிருக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...