பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த காதலர்கள்: காதலி பரிதாப சாவு


தாராபுரம் உப்பர் டேம் பகுதியில் வசிப்பவர் மோகன். இவரது மகள் அஞ்சு (19). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தாராபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்தனர். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் (23) என்பவரும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அஞ்சு மற்றும் சஞ்சீவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அஞ்சு நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த எலி மருந்தை உண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையறிந்த அவரது பெற்றோர், அஞ்சு-வை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அஞ்சு இன்று காலை பரிதாபமாக பலியானார். காதலி விஷம் அருந்தியதை அறிந்த சஞ்சீவ் நேற்று விஷம் குடித்தார். இதையறிந்த அவரது நண்பர்கள் சஞ்சீவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்போது சஞ்சீவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...