ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை:

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பர் நிர்மல் குமார் ஆகியோர் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்டபணப் பிரச்சனை மற்றும் முன்விரோதம் காரணமாக, இருவரும் கடத்தப்பட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் அடைத்து வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அவர்களை விடுவிக்க ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என உறவினர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின் பேரில், போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. போலீசாரின் ஆலோசனையின்படி, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் கடத்தல்காரர்களை தொடர்புகொண்டு, பணத்தை தயார் செய்துள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, திருப்பூர் பேருந்து நிலையம் அருகே பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கடத்தல் கும்பல் கூறியதைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் சாதாரண உடையில் போலீசாரும் சென்று கண்காணித்தனர்.

அப்போது பணத்தை பெற வந்த இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த ஆனந்தன் மற்றும் மோகன் என்பது தெரியவந்தது. மேலும், திருப்பூரைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் காளிதாஸ் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அவர்கள் கடத்தலுக்கு உதவியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, திருப்பூரில் பதுங்கியிருந்த ராம்குமார் மற்றும் காளிதாஸையும் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட நவீன் மற்றும் நிர்மல் குமாரை பத்திரமாக மீட்டனர். இந்த வழக்கில் ஆனந்தன், மோகன், ராம்குமார் மற்றும் காளிதாஸ் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.



(ராம்குமார்- காளிதாஸ்)

இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் திருப்பூரைச் சேர்ந்த கருப்பசாமியை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கருப்பசாமிக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

கடத்தல் வழக்கில் தொடர்புடைய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், மேலும் ஒரு குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் கைது செய்யப்பட்டதும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...