தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், அவசரக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Coimbatore:

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.



கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தாழ்வான பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையம் மற்றும் லங்கா கார்னர் பகுதிகளில் 21 ஹெச்பி மற்றும் 20 ஹெச்பி திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவிநாசி மேம்பாலம் அருகே 28 ஹெச்பி, 30 ஹெச்பி, 12.5 ஹெச்பி, 25 ஹெச்பி மற்றும் 25 ஹெச்பி திறன் கொண்ட ஐந்து மின் மோட்டார்களும், 184 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் தயார் நிலையில் உள்ளன.

கிக்கானி பள்ளி அருகே 28 ஹெச்பி, 20 ஹெச்பி மற்றும் 7.5 ஹெச்பி திறன் கொண்ட மூன்று மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் காளீஸ்வரா மில் அருகே 36 ஹெச்பி, 21 ஹெச்பி மற்றும் 21 ஹெச்பி திறன் கொண்ட மூன்று மின் மோட்டார்களும், 125 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் பலத்த காற்றின் போது சாலைகளில் மரங்கள் அல்லது மரக்கிளைகள் விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் கூடுதல் மரம் அறுக்கும் இயந்திரங்களும், மாநகராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...