பீகாரில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட 45 கிலோ கஞ்சா பறிமுதல் - மூவர் கைது

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையின்போது ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பீகாரில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை, காரைக்குடி பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது.

கோவை: கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் பீகாரில் இருந்து கடத்தப்பட்ட 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்தி நிறுத்திஉள்ளே இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார்ஆட்டோவில் இருந்த பல மூட்டைகளைதிறந்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஆய்வில், அந்த மூட்டைகளில் 45 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுபின்னர், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர்கள் மதுரையைச் சேர்ந்த ரோகித், கார்த்திக் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்றும், கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது: கைதான மூன்று பேரும் பீகாருக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி, அதை ரயில் மூலம் கோவைக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு கடத்த முடிவு செய்து ஆட்டோவில் பொள்ளாச்சியை நோக்கி சென்றபோது சிக்கிக்கொண்டனர். இந்த மூன்று பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா கடத்திய வழக்கு உள்ளது.
இந்த வழக்கில் முக்கிய நபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...