பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலையில் சிறப்பு வழிபாடு

BJP தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை மக்கள் சேவை மையம் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. BJP நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Coimbatore: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கோவையின் பல்வேறு கோவில்களில் BJP தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று சிறப்புப் பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றன.






BJP அகில இந்திய தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி கோவை மாவட்ட BJP நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவர் நடத்தி வரும் கோவை மக்கள் சேவை மையம் அமைப்பின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.






அதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோவிலில் கோவை மக்கள் சேவை மையத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் BJP தொண்டர்கள் வானதி சீனிவாசன் பெயரில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். அவர் நீடூழி வாழவும் மக்கள் பணி சிறக்கவும் வேண்டி வழிபாடுகள் நடைபெற்றன.






கோவில் வழிபாடுகள் முடிந்ததைத் தொடர்ந்து பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் விதமாக மருதமலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட BJP நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் பங்கேற்றனர்.


Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...