பீளமேடு வார்டு 27-ல் சுகாதார மையம், பள்ளி, தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆரம்ப சுகாதார மையம், பள்ளியில் புத்தக வழங்கல், சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு மேம்பாட்டு மற்றும் நலத்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாரதி காலனி ஆரம்ப சுகாதார மையம், துவக்கப்பள்ளி, சாக்கடை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் அடங்கும்.



பீளமேடு பாரதி காலனி பகுதியில் இயங்கி வரும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டையும் சரிபார்த்தார். இந்த ஆய்வில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.



பீளமேடு கோயமுத்தூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு புதிய புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கவுன்சிலர் அம்பிகா தனபால் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை நேரடியாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இதில் உடன் இருந்தனர்.



கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பாரதி காலனி பகுதியில் தினசரி குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறுகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் பேட்டரி ஆட்டோ மூலம் குப்பை சேகரிப்பு பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...