கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்குளத்தில் இருந்த சுமார் 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தன்னார்வலர்கள் துணையுடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் உள்ள புதர்கள் கட்டிட கழிவுகள் ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், 12.5 கிமீ தூரமுள்ள குனியமுத்துர் தடுப்பணை வாய்க்கால் தூர்வாரும் பணியானது நமது கோவை நமது பசுமை அமைப்பின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 150 தன்னார்வலர்கள், கேமரூன் மனுஃபேட்சரிங் இந்தியா பிவிடி லிமிட்டடு உதவியுடன் வெள்ளலூர் குளத்தில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை 65 சதவிகிதம் பணி நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து, மலுமிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் மழை நீர் குட்டை தூர்வாரும் பணியினையும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் துவங்கி உள்ளனர்.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்குளத்தில் இருந்த சுமார் 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தன்னார்வலர்கள் துணையுடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் உள்ள புதர்கள் கட்டிட கழிவுகள் ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், 12.5 கிமீ தூரமுள்ள குனியமுத்துர் தடுப்பணை வாய்க்கால் தூர்வாரும் பணியானது நமது கோவை நமது பசுமை அமைப்பின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 150 தன்னார்வலர்கள், கேமரூன் மனுஃபேட்சரிங் இந்தியா பிவிடி லிமிட்டடு உதவியுடன் வெள்ளலூர் குளத்தில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை 65 சதவிகிதம் பணி நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து, மலுமிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் மழை நீர் குட்டை தூர்வாரும் பணியினையும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் துவங்கி உள்ளனர்.