+2 பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் தாமரைச்செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று தாமரைச்செல்வி எதிர்பார்த்திருந்தார்.

இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. அதில் தாமரைச்செல்வி தான் எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து ஆயிரத்து 88 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தேர்வில் தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்றதால் தாமரைச்செல்வி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த செட்டிபாளையம் போலீசார், சம்பவ இடதிற்கு சென்று தாமரைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...